கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேரப் போக்குவரத்துக்கு அனுமதி

நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மலைப் பாதைகளையும், அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மாவட்டமாகும். குறிப்பாக, கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைகளை கொண்ட மலைப் பாதையாகும். இந்த மலைப்பாதையில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், இந்த மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லவும், இரவு 9 மணிக்கு மேல் வாகனங்களை இயக்கவும் தடை விதித்தது.

இந்த நிலையில், உதகையை அடுத்த மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதையொட்டி இன்று முதல் அப்பகுதில் கோவில் திருவிழா களைக் கட்டியுள்ளது. ஆகவே, இந்தக் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் கல்லட்டி மலைப்பாதையில் இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பலத்த பாதுகாப்புடன், காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுரைகள் வழங்கிய பின்னரே, கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...