நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மலைப் பாதைகளையும், அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மாவட்டமாகும். குறிப்பாக, கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைகளை கொண்ட மலைப் பாதையாகும். இந்த மலைப்பாதையில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், இந்த மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லவும், இரவு 9 மணிக்கு மேல் வாகனங்களை இயக்கவும் தடை விதித்தது.
இந்த நிலையில், உதகையை அடுத்த மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதையொட்டி இன்று முதல் அப்பகுதில் கோவில் திருவிழா களைக் கட்டியுள்ளது. ஆகவே, இந்தக் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் கல்லட்டி மலைப்பாதையில் இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பலத்த பாதுகாப்புடன், காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுரைகள் வழங்கிய பின்னரே, கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.