அரசு அலுவலகங்களின் சுவர்களில் சட்டவிரோதமாக விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை : அரசு அலுவலகங்களின் சுவர்களில் சட்டவிரோதமாக விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் தனியார்களின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்படுவது காணப்படுகின்றது. அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர்களிலோ, அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள் மீதோ, அரசு அலுவலக வளாகங்களிலோ தனியார்கள் சுவரொட்டிகள் ஒட்டுவதோ, சுவற்றில் எழுதுவதோ, விளம்பரப் பலகைகள் வைப்பதோ சட்டத்திற்கு புறம்பான செயல்களாகும். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனவர்கள் மீது தமிழ்நாடு ஓபன் பிளேஸின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் தனியார்களின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்படுவது காணப்படுகின்றது. அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர்களிலோ, அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள் மீதோ, அரசு அலுவலக வளாகங்களிலோ தனியார்கள் சுவரொட்டிகள் ஒட்டுவதோ, சுவற்றில் எழுதுவதோ, விளம்பரப் பலகைகள் வைப்பதோ சட்டத்திற்கு புறம்பான செயல்களாகும். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனவர்கள் மீது தமிழ்நாடு ஓபன் பிளேஸின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.