சர்ச்சைக்குரிய ஆடியோவிற்கு காழ்ப்புணர்ச்சியே காரணம்: பாரதியார் பல்கலை., பேராசிரியர் விளக்கம்

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆடியோ, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களுள் ஒருவரான சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

கோவை: சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆடியோ, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களுள் ஒருவரான சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி (67), அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியதாக தொலைநிலைக் கல்வி இயக்குநர் மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சொர்ணலதா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த லஞ்ச ஊழல் வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவனிடம் பேராசிரியர் ஒருவர் தங்கம், வெள்ளியில் பரிசுப் பொருட்களை கேட்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், வாய்மொழி தேர்வில் பங்குபெற இருக்கும் ஒரு மாணவனிடம், கல்வியியல் பேராசிரியரும், சிண்டிகேட் உறுப்பினருமான சிங்காரவேலன் பரிசுப் பொருட்களை கேட்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆடியோவிற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிங்காரவேலு, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது குரல் சித்தரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளதாகவும், தனது குரலை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள குரல் என்னுடையதல்ல. பொய்யான இந்தக் குரலை ஆய்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் இருப்பவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்புக்கான போட்டி பொறாமைகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தப் போலியான ஆடியோவை பரப்பி வருகின்றனர். என் மீது கலங்கம் ஏற்படுத்துபவர்கள் என் குரலா என ஆய்வு செய்யட்டும். தவறுகளில் ஈடுபடாதவர்களை வேண்டுமென்றே குற்றப்படுத்துவது ஏற்புடையதல்ல.



போலியான ஆடியோ தொடர்பாக முறைப்படி நிர்வாகத்திடம் புகார் அளித்துவிட்டேன். அடுத்தகட்டமாக என் மீது கலங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்த முறைகேடான எந்த போனும் வரவில்லை. ஆகவே, மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் போலவே, அடுத்தடுத்து மற்ற சிண்டிகேட் உறுப்பினர்களைப் பொய்யாக கலங்கப்படுத்தி சித்தரிக்க பல்கலைக்கழகத்தில் சதி திட்டங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...