நீலகிரி மாவட்டம் உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட கட்டிடம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட கட்டிடம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
உதகை குந்தா ஹவுஸ் சாலையில் எம்.சிவராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புற பகுதியில் அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டதால், அப்பகுதியை நகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்தனர். நகராட்சி ஆணையர் சி.ரவி தலைமையில், நகராட்சி ஊழியர்கள், காவல் ஆய்வாளர் ரவீந்தரன் மற்றும் போலீஸ் பாதுகாப்பில் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையர் சி. ரவி கூறியதாவது :- சிவராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பின்புறப் பகுதி விதிகளை மீறி அனுமதியின்றி கட்டப்பட்டதாக பி.ஜெயராம் என்பவர் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் அளிக்கப்பட்டது. தீர்ப்பில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பேரில், அனுமதியற்ற பகுதி இடிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.
உதகை குந்தா ஹவுஸ் சாலையில் எம்.சிவராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புற பகுதியில் அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டதால், அப்பகுதியை நகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்தனர். நகராட்சி ஆணையர் சி.ரவி தலைமையில், நகராட்சி ஊழியர்கள், காவல் ஆய்வாளர் ரவீந்தரன் மற்றும் போலீஸ் பாதுகாப்பில் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையர் சி. ரவி கூறியதாவது :- சிவராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பின்புறப் பகுதி விதிகளை மீறி அனுமதியின்றி கட்டப்பட்டதாக பி.ஜெயராம் என்பவர் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் அளிக்கப்பட்டது. தீர்ப்பில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பேரில், அனுமதியற்ற பகுதி இடிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.