நீட் தேர்வை தடை செய்யக்கோரி திருப்பூரில் அனைத்து அரசியல் இயக்கங்களின் மாணவர் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: நீட் தேர்வை தடை செய்யக்கோரி திருப்பூரில் அனைத்து அரசியல் இயக்கங்களின் மாணவர் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறி பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில, தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகங்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் இயக்கங்கள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது, மத்திய அரசு தொடர்ந்து, தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் இந்த நீட் தேர்வினை நடத்தும்பட்சத்தில், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறி பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில, தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகங்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் இயக்கங்கள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது, மத்திய அரசு தொடர்ந்து, தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் இந்த நீட் தேர்வினை நடத்தும்பட்சத்தில், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.