திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டையும், ஊழலையும் கண்டித்து தி.மு.க.,வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டையும், ஊழலையும் கண்டித்து தி.மு.க.,வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரத்தின் நகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, கட்டிட வரைபட அனுமதி கட்டணம் பன்மடங்கு உயர்வு, கட்டிட வரைபட நகல் கட்டணம் உயர்வு, இலவச பொது கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றி பணம் வசூலிப்பு, நகரில் சுகாதார சீர்கேடு, அலுவலக நிர்வாக சீர்கேடு, லஞ்சம் தலைவரித்தாடுவது, மக்கள் விரோதப்போக்கு உள்ளிட்டவைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தி.மு.க, முன்னாள் அமைச்சர் மு.பே. சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், நகர செய. தனசேகர், ஒன்றிய செய.எஸ்.வி. செந்தில்குமார் மற்றும் தி.மு.க.,வின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தின் நகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, கட்டிட வரைபட அனுமதி கட்டணம் பன்மடங்கு உயர்வு, கட்டிட வரைபட நகல் கட்டணம் உயர்வு, இலவச பொது கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றி பணம் வசூலிப்பு, நகரில் சுகாதார சீர்கேடு, அலுவலக நிர்வாக சீர்கேடு, லஞ்சம் தலைவரித்தாடுவது, மக்கள் விரோதப்போக்கு உள்ளிட்டவைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தி.மு.க, முன்னாள் அமைச்சர் மு.பே. சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், நகர செய. தனசேகர், ஒன்றிய செய.எஸ்.வி. செந்தில்குமார் மற்றும் தி.மு.க.,வின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.