பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை தொடக்கம்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது. 



மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் அடர்ந்த வனப்பகுதிக்குளின் நடுவே அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு நாளை (வெள்ளிகிழமை) நடை திறப்புடன் இத்திருவிழா துவங்குகிறது. நாளை மறுநாள் மாலை திருவிளக்கு வழிபாடும், 25-ம் தேதி இரவு 8 மணியளவில் கங்கை பூஜையும் நடைபெறவுள்ளது.

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு நீலகிரி மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் சமவெளி பிரதேசத்திலிருந்தும் பக்கதர்கள் வரவிருப்பதால், கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், போலீஸார் சார்பாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளையில், பக்கதர்களின் வசதிக்காக உதகையிலிருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகளில் உதகையிலிருந்து பொக்காபுரம் செல்ல ரூ.81-ம், கூடலூரிலிருந்து பொக்காபுரம் செல்ல ரூ. 30 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...