சேலம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சேலம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சேலம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரயில் எண் - 06011 எர்ணாகுளம் சந்திப்பு - சேலம் சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 08-ம் தேதி முதல் ஜுலை 01-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 08-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.45 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 06.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

இதேபோல, ரயில் எண் - 06012 சேலம் - எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 09-ம் தேதி முதல் ஜுலை 02-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 09-ம் தேதி (திங்கள்கிழமை) இரவு 10.30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 07.45 மணிக்கு சென்றடைகிறது. 

இதில், 4 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 13 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது, ஆலுவா, திரிசூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...