போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சேலம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சேலம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் - 06011 எர்ணாகுளம் சந்திப்பு - சேலம் சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 08-ம் தேதி முதல் ஜுலை 01-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 08-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.45 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 06.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது.
இதேபோல, ரயில் எண் - 06012 சேலம் - எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 09-ம் தேதி முதல் ஜுலை 02-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 09-ம் தேதி (திங்கள்கிழமை) இரவு 10.30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 07.45 மணிக்கு சென்றடைகிறது.
இதில், 4 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 13 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது, ஆலுவா, திரிசூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
ரயில் எண் - 06011 எர்ணாகுளம் சந்திப்பு - சேலம் சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 08-ம் தேதி முதல் ஜுலை 01-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 08-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.45 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 06.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது.
இதேபோல, ரயில் எண் - 06012 சேலம் - எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 09-ம் தேதி முதல் ஜுலை 02-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 09-ம் தேதி (திங்கள்கிழமை) இரவு 10.30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 07.45 மணிக்கு சென்றடைகிறது.
இதில், 4 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 13 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது, ஆலுவா, திரிசூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.