கோவை மாநகராட்சிக்குட்பட்ட 51-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் புதுப்பித்து கட்டும் பணியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுணன் தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 51-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் புதுப்பித்து கட்டும் பணியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுணன் தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம், 51-வது வார்டுக்குட்பட்ட டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை, 9-வது வீதியில் மாநகராட்சியின் பொதுநிதியில் இருந்து ரூ. 5 லட்சம் செலவிலான மழைநீர் வடிகால் புதுப்பித்து கட்ட திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இந்தப் பணியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே. அர்ச்சுணன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் உதவி பொறியாளர் ஐ. நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம், 51-வது வார்டுக்குட்பட்ட டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை, 9-வது வீதியில் மாநகராட்சியின் பொதுநிதியில் இருந்து ரூ. 5 லட்சம் செலவிலான மழைநீர் வடிகால் புதுப்பித்து கட்ட திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இந்தப் பணியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே. அர்ச்சுணன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் உதவி பொறியாளர் ஐ. நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.