பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் பல்வேறு ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை நேற்று இரவு 8.30 மணியளவில் சோதனை செய்யப்பட்டது. இரவு நேரத்திலும் குறிப்பிட்ட இலக்கை அடையாளம் கண்டு தாக்கும் சோதனையில், கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மிகவும் துல்லியமாக தனது இலக்கை அடைந்தது.

இந்த ஏவுகணை 500 முதல் 1,000 கிலோ எடையை தாங்கும் சக்தி கொண்டது. திரவ எரிபொருளால் இயங்கும் தன்மை கொண்டது. இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. ஜனவரி 18-ம் தேதி நடந்த அக்னி-5 ஏவுகணை சோதனை, பிப்ரவரி 6-ம் தேதி நடந்த அக்னி-1 ஏவுகணை சோதனை, நேற்று முன்தினம் நடந்த அக்னி-2 ஏவுகணை சோதனை ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, பிரித்வி-2 ஏவுகணை சோதனையும் வெற்றி அடைந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் கடந்த 2003ம் ஆண்டு இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...