பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த ஜாமின் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை: பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த ஜாமின் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சார்பில் ஜாமின் கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமின் மனுவை நிராகரித்தது.
இதனால், கடந்த வாரம் கணபதியை 4 நாள் காவலில் எடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே, இரண்டாவது முறையாக ஜாமின் கோரி முன்னாள் துணைவேந்தர் கணபதியின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், மீண்டும் தள்ளுபடி செய்தது. மேலும், பேராசிரியர் தர்மராஜின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சார்பில் ஜாமின் கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமின் மனுவை நிராகரித்தது.
இதனால், கடந்த வாரம் கணபதியை 4 நாள் காவலில் எடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே, இரண்டாவது முறையாக ஜாமின் கோரி முன்னாள் துணைவேந்தர் கணபதியின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், மீண்டும் தள்ளுபடி செய்தது. மேலும், பேராசிரியர் தர்மராஜின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.