முன்னாள் துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி

பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த ஜாமின் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை: பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த ஜாமின் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சார்பில் ஜாமின் கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமின் மனுவை நிராகரித்தது.

இதனால், கடந்த வாரம் கணபதியை 4 நாள் காவலில் எடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே, இரண்டாவது முறையாக ஜாமின் கோரி முன்னாள் துணைவேந்தர் கணபதியின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், மீண்டும் தள்ளுபடி செய்தது. மேலும், பேராசிரியர் தர்மராஜின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...