உதகை படகு இல்லத்தில் 5 மொழிகளில் தகவல் பலகைகள்

வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.



சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் இருப்பாதால் கேரள மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  



பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சுற்றுலா பயணிகளுக்காக முதன்முறையாக உதகை படகு இல்லத்தில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, படகு இல்ல நுழைவாயில் பகுதியில் மட்டும் இந்த 5 மொழி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் படகு இல்லத்தில் முக்கிய பகுதிகளை குறிக்கும் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக படகு இல்ல நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...