திருப்பூர் மாவட்டம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கோவையில் உற்பத்தியாகும் கௌசிகா நதி புனிதநீர் எடுக்கப்பட்டது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கோவையில் உற்பத்தியாகும் கௌசிகா நதி புனிதநீர் எடுக்கப்பட்டது.

கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதற்காக, குளத்துப்பாளையம், கிட்டாம்பாளையம், வாகராயம்பாளையம், காரைக்கால்பாளையம், கணபதிபாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம் சார்ந்த பகுதிகள் சார்பாக புனித நீர் எடுத்து செல்லப்படுகிறது. இதையடுத்து, வரும் 25-ம் தேதியன்று நடைபெறும் பூஜைக்கு புனித நதி தீர்த்தங்களுடன் கும்பாபிஷேக கலச பூஜை நடைபெறும்.

இந்த நிகழ்வுக்கு கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகில் உள்ள குருடிமலையில் உற்பத்தியாகும் கெளசிகா நதியில் தீர்த்தம் எடுத்துவர குளத்துபாளையம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஆதி, தேவேந்திரன் மற்றும் 6 குலமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, குருஅருள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கௌசிகா நதி தீர்த்தக்குடங்கள் எடுத்துவரப்பட்டன.
மாபெரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நமது கெளசிகா நதி தீர்த்தமும் இடம்பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதற்காக, குளத்துப்பாளையம், கிட்டாம்பாளையம், வாகராயம்பாளையம், காரைக்கால்பாளையம், கணபதிபாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம் சார்ந்த பகுதிகள் சார்பாக புனித நீர் எடுத்து செல்லப்படுகிறது. இதையடுத்து, வரும் 25-ம் தேதியன்று நடைபெறும் பூஜைக்கு புனித நதி தீர்த்தங்களுடன் கும்பாபிஷேக கலச பூஜை நடைபெறும்.

இந்த நிகழ்வுக்கு கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகில் உள்ள குருடிமலையில் உற்பத்தியாகும் கெளசிகா நதியில் தீர்த்தம் எடுத்துவர குளத்துபாளையம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஆதி, தேவேந்திரன் மற்றும் 6 குலமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, குருஅருள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கௌசிகா நதி தீர்த்தக்குடங்கள் எடுத்துவரப்பட்டன.
மாபெரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நமது கெளசிகா நதி தீர்த்தமும் இடம்பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.