கீரனூர் கும்பாபிஷேகத்துக்கு செல்கிறது கௌசிகா நதியின் புனித நீர்

திருப்பூர் மாவட்டம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கோவையில் உற்பத்தியாகும் கௌசிகா நதி புனிதநீர் எடுக்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கோவையில் உற்பத்தியாகும் கௌசிகா நதி புனிதநீர் எடுக்கப்பட்டது. 



கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதற்காக, குளத்துப்பாளையம், கிட்டாம்பாளையம், வாகராயம்பாளையம், காரைக்கால்பாளையம், கணபதிபாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம் சார்ந்த பகுதிகள் சார்பாக புனித நீர் எடுத்து செல்லப்படுகிறது. இதையடுத்து, வரும் 25-ம் தேதியன்று நடைபெறும் பூஜைக்கு புனித நதி தீர்த்தங்களுடன் கும்பாபிஷேக கலச பூஜை நடைபெறும். 



இந்த நிகழ்வுக்கு கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகில் உள்ள குருடிமலையில் உற்பத்தியாகும் கெளசிகா நதியில் தீர்த்தம் எடுத்துவர  குளத்துபாளையம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஆதி, தேவேந்திரன் மற்றும் 6 குலமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, குருஅருள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கௌசிகா நதி தீர்த்தக்குடங்கள் எடுத்துவரப்பட்டன.

மாபெரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நமது கெளசிகா நதி தீர்த்தமும் இடம்பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், உறுதுணையாக  இருந்த  அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...