திருப்பூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் வீட்டு பூட்டு உடைத்து 25 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
திருப்பூர் : திருப்பூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் வீட்டு பூட்டு உடைத்து 25 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசியில் உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர், தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இந்நிலையில், இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்களைக கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக அவிநாசி போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசியில் உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர், தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இந்நிலையில், இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்களைக கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக அவிநாசி போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.