அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில், கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.
கோவை : அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில், கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். இந்தாண்டு 10,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக தேர்வு எழுதி உள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என உருவாகும்பட்சத்தில், அவர்களுக்கான பின்னடைவாக இது இருக்கும். இது தொடர்பாக அவசர சட்டத்தை அனுப்பியிருக்கும் நிலையில், அதை செயல்படுத்த மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசு மரணம் தவிர்ப்பு, கர்ப்பிணிகளின் பாதுகாப்பு போன்றவை இதுபோன்ற மருத்துவர்களால் தான் மேம்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில் கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். இதுவெறும் அரசு மருத்துவர்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாது, பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கின்ற விஷயம் என்பதால் மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்தி மீண்டும் தமிழகத்தில் மருத்துவ பட்டய மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். இந்தாண்டு 10,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக தேர்வு எழுதி உள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என உருவாகும்பட்சத்தில், அவர்களுக்கான பின்னடைவாக இது இருக்கும். இது தொடர்பாக அவசர சட்டத்தை அனுப்பியிருக்கும் நிலையில், அதை செயல்படுத்த மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசு மரணம் தவிர்ப்பு, கர்ப்பிணிகளின் பாதுகாப்பு போன்றவை இதுபோன்ற மருத்துவர்களால் தான் மேம்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில் கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். இதுவெறும் அரசு மருத்துவர்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாது, பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கின்ற விஷயம் என்பதால் மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்தி மீண்டும் தமிழகத்தில் மருத்துவ பட்டய மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.