ஆவினில் கோடை கால மோர் மற்றும் தயிர் அறிமுகம்

கோவையில் உள்ள ஆவின் நிலையங்களில், கோடை கால மோர் மற்றும் தயிர் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் உள்ள ஆவின் நிலையங்களில், கோடை கால மோர் மற்றும் தயிர் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள ஆவின் அலுவலகத்தில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோடை கால மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளின் விற்பனையை ஆவின் பொதுமேலாளர் எஸ். செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



பின்னர், அவர் கூறியதாவது, 'கோடை கால வெயிலால் ஏற்படும் தாகத்தை தணிக்க, கோடை கால மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளோம். மிகக் குறைவான விலையில், இவை விற்கப்பட்டாலும், தரத்தில் மற்ற தயாரிப்புகளை விட சிறந்தவையாகும். நகரில் உள்ள அனைத்து ஆவின் விற்பனை நிலையங்களிலும், இந்த மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கலாம். மேலும், சிறப்பான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 1/2 லிட்டர் தயிர் பாக்கெட்டுகள், வருடம் முழுவதும் ஆவின் நிலையங்களில் கிடைக்கும், 200 மி.லி மோர் பாக்கெட் விற்பனை, வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து தொடரப்படும்' என்றார்.

200 மி.லி. மோர் பாக்கெட் ரூ.7-க்கும், 1/2 லிட்டர் தயிர் பாக்கெட் ரூ. 27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மோர் பாக்கெட் ரூ.5-க்கும், தயிர் பாக்கெட் ரூ. 22-க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...