ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி வரை கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் திட்டத்தை மாற்றியமைத்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக கோவை மாவட்ட தி.மு.க, அறிவித்துள்ளது.
கோவை: ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி வரை கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் திட்டத்தை மாற்றியமைத்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக கோவை மாவட்ட தி.மு.க, அறிவித்துள்ளது.
கோவையில் கட்டப்பட உள்ள மேம்பாலத்தின் வரைபடத்தை மாற்றிக் கட்ட அ.தி.மு.க., அரசு திட்டமிட்டு வருகின்றது. இதுதொடர்பாக, கோவை பீளமேட்டில் தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பாலக்காட்டிலிருந்து, ஆத்துப்பாலம், ஒப்பணக்காரவீதி வரை உயர்மட்ட மேம்பாலம் கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 121 கோடி மதிப்பீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆத்துப்பாலத்திலிருந்து கட்டத் திட்டமிடப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது, கரும்புக்கடை பகுதியிலிருந்து கட்ட திட்டமிட்டுள்ளனர். இதனால், மக்களுக்குப் பயன்பெறாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் 3 அடுக்கு மேம்பாலமாக திட்டமிட்டிருந்ததை, 2 அடுக்கு மேம்பாலமாக மாற்றிக் கட்டப்பட்டது. இப்போது, அந்த மேம்பாலம் பொதுமக்களுக்கு பயன்பெறாமல் உள்ளது. இதேபோல, கோவையில் பல்வேறு மேம்பாலங்கள் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம், ஆவாரம்பாளையம் மேம்பாலம், போத்தனூர் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்கள் கிடப்பில் போடப்பட்டும், ஆமை வேகத்தில் நடந்தும் வருகின்றது. இந்நிலையில், மக்களுக்குப் பயனற்ற நிலையில், ஆத்துப்பாலம் மேம்பாலத்தைக் கட்டினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.'' இவ்வாறு கூறினார்.
மேலும், மாற்றியமைக்கப்பட்ட ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி மேம்பாலத் திட்ட வரைபடத்தையும் செய்தியாளர்களிடம் அவர் காண்பித்தார்.
கோவையில் கட்டப்பட உள்ள மேம்பாலத்தின் வரைபடத்தை மாற்றிக் கட்ட அ.தி.மு.க., அரசு திட்டமிட்டு வருகின்றது. இதுதொடர்பாக, கோவை பீளமேட்டில் தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பாலக்காட்டிலிருந்து, ஆத்துப்பாலம், ஒப்பணக்காரவீதி வரை உயர்மட்ட மேம்பாலம் கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 121 கோடி மதிப்பீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆத்துப்பாலத்திலிருந்து கட்டத் திட்டமிடப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது, கரும்புக்கடை பகுதியிலிருந்து கட்ட திட்டமிட்டுள்ளனர். இதனால், மக்களுக்குப் பயன்பெறாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் 3 அடுக்கு மேம்பாலமாக திட்டமிட்டிருந்ததை, 2 அடுக்கு மேம்பாலமாக மாற்றிக் கட்டப்பட்டது. இப்போது, அந்த மேம்பாலம் பொதுமக்களுக்கு பயன்பெறாமல் உள்ளது. இதேபோல, கோவையில் பல்வேறு மேம்பாலங்கள் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம், ஆவாரம்பாளையம் மேம்பாலம், போத்தனூர் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்கள் கிடப்பில் போடப்பட்டும், ஆமை வேகத்தில் நடந்தும் வருகின்றது. இந்நிலையில், மக்களுக்குப் பயனற்ற நிலையில், ஆத்துப்பாலம் மேம்பாலத்தைக் கட்டினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.'' இவ்வாறு கூறினார்.
மேலும், மாற்றியமைக்கப்பட்ட ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி மேம்பாலத் திட்ட வரைபடத்தையும் செய்தியாளர்களிடம் அவர் காண்பித்தார்.