மறைந்த தமிழக வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிக்கு விருது

தமிழக வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிக்கான விருது, மறைந்த முனைவர் ச. இராபினின் மனைவி சலோமிக்கு வழங்கப்பட்டது.

தமிழக வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிக்கான விருது, மறைந்த முனைவர் ச. இராபினின் மனைவி சலோமிக்கு வழங்கப்பட்டது.

முனைவர் இராபின், நெல்லில் பலஉயர் விளைச்சல் இரகங்களை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரின் “நெல் மரபியல் ஆராய்ச்சியின் பயனாக உயர் விளைச்சல் இரகங்களும் வீரிய ஒட்டுகளும் (கோஆர் எச்3 மற்றும் கோஆர் எச்4 ) வெளியிடப்பட்டுள்ளது. அவர் வறட்சியை தாங்கி வளரும் நெல் இரகங்களான பரமக்குடி 2, பரமக்குடி 3, மதுரை 5, டி.ஆர்.ஆர். தான் 40 மற்றும் உப்புத் தன்மையை தாங்கி வளரும் இரகமாக திருச்சி 2, வெள்ளத்தை தாங்கி வளரும் சி.ஆர் 1,009 சப் 1 ஆகியவையும், உயர் விளைச்சல் சன்ன இரகங்களான கோவை 48, கோ 49, கோ 50 கோ 51 மற்றும் கோ 52 இரகங்களையும் வெளியிட்டுள்ளார். 

கோ 51 சன்ன நெல் இரகத்தை பிரபலப்படுத்துவதில் இந்திய அளவில் முயற்சி எடுத்து 13 மாநிலங்களுக்கு அந்த நெல்லைப் பயிரிடுவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளார். தமிழகத்தில் கோ 51 இரகத்தை பயிரிட்ட ஒரு விவசாயி 18 டன்கள் மகசூல் எடுத்து சாதனை படைத்து தமிழக முதலமைச்சரிடம் கடந்த குடியரசுதின விழாவில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பரிசு பெற்றுள்ளார். 

முனைவர் ச. இராபின் (லேட்) அவர்களின் இந்த நெல் ஆராய்ச்சிகளின் சாதனைகளுக்காக முனைவர் இ.எ. சித்திக் பயன்னியம் விருது, மரபியல் துறை, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் பிப்ரவரி 9, 2018 ஆம் ஆண்டு புது தில்லியில் வழங்கப்பட்டது. முனைவர் ஏ.கே. சிங், துறைத் தலைவர், முனைவர் பத்ம ஆர்.பி. சர்மா அன்னரின் சாதனைகளைப் பற்றிக் கூறினர். விழாவின் சிறப்பு விருந்தினர் கே.வி. பிரபு, சேர்மன், பி.பி.வி எப்.ஆர்.ஐ அவர்கள் விருதை ச. இராபின் அவர்களின் துணைவியார் சலோமி இராபினுக்கு வழங்கினார். விழாவில் பல முன்னோடி விஞ்ஞானிகள் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...