தமிழக வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிக்கான விருது, மறைந்த முனைவர் ச. இராபினின் மனைவி சலோமிக்கு வழங்கப்பட்டது.
தமிழக வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிக்கான விருது, மறைந்த முனைவர் ச. இராபினின் மனைவி சலோமிக்கு வழங்கப்பட்டது.
முனைவர் இராபின், நெல்லில் பலஉயர் விளைச்சல் இரகங்களை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரின் “நெல் மரபியல் ஆராய்ச்சியின் பயனாக உயர் விளைச்சல் இரகங்களும் வீரிய ஒட்டுகளும் (கோஆர் எச்3 மற்றும் கோஆர் எச்4 ) வெளியிடப்பட்டுள்ளது. அவர் வறட்சியை தாங்கி வளரும் நெல் இரகங்களான பரமக்குடி 2, பரமக்குடி 3, மதுரை 5, டி.ஆர்.ஆர். தான் 40 மற்றும் உப்புத் தன்மையை தாங்கி வளரும் இரகமாக திருச்சி 2, வெள்ளத்தை தாங்கி வளரும் சி.ஆர் 1,009 சப் 1 ஆகியவையும், உயர் விளைச்சல் சன்ன இரகங்களான கோவை 48, கோ 49, கோ 50 கோ 51 மற்றும் கோ 52 இரகங்களையும் வெளியிட்டுள்ளார்.
கோ 51 சன்ன நெல் இரகத்தை பிரபலப்படுத்துவதில் இந்திய அளவில் முயற்சி எடுத்து 13 மாநிலங்களுக்கு அந்த நெல்லைப் பயிரிடுவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளார். தமிழகத்தில் கோ 51 இரகத்தை பயிரிட்ட ஒரு விவசாயி 18 டன்கள் மகசூல் எடுத்து சாதனை படைத்து தமிழக முதலமைச்சரிடம் கடந்த குடியரசுதின விழாவில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பரிசு பெற்றுள்ளார்.
முனைவர் ச. இராபின் (லேட்) அவர்களின் இந்த நெல் ஆராய்ச்சிகளின் சாதனைகளுக்காக முனைவர் இ.எ. சித்திக் பயன்னியம் விருது, மரபியல் துறை, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் பிப்ரவரி 9, 2018 ஆம் ஆண்டு புது தில்லியில் வழங்கப்பட்டது. முனைவர் ஏ.கே. சிங், துறைத் தலைவர், முனைவர் பத்ம ஆர்.பி. சர்மா அன்னரின் சாதனைகளைப் பற்றிக் கூறினர். விழாவின் சிறப்பு விருந்தினர் கே.வி. பிரபு, சேர்மன், பி.பி.வி எப்.ஆர்.ஐ அவர்கள் விருதை ச. இராபின் அவர்களின் துணைவியார் சலோமி இராபினுக்கு வழங்கினார். விழாவில் பல முன்னோடி விஞ்ஞானிகள் பங்கு பெற்றனர்.
முனைவர் இராபின், நெல்லில் பலஉயர் விளைச்சல் இரகங்களை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரின் “நெல் மரபியல் ஆராய்ச்சியின் பயனாக உயர் விளைச்சல் இரகங்களும் வீரிய ஒட்டுகளும் (கோஆர் எச்3 மற்றும் கோஆர் எச்4 ) வெளியிடப்பட்டுள்ளது. அவர் வறட்சியை தாங்கி வளரும் நெல் இரகங்களான பரமக்குடி 2, பரமக்குடி 3, மதுரை 5, டி.ஆர்.ஆர். தான் 40 மற்றும் உப்புத் தன்மையை தாங்கி வளரும் இரகமாக திருச்சி 2, வெள்ளத்தை தாங்கி வளரும் சி.ஆர் 1,009 சப் 1 ஆகியவையும், உயர் விளைச்சல் சன்ன இரகங்களான கோவை 48, கோ 49, கோ 50 கோ 51 மற்றும் கோ 52 இரகங்களையும் வெளியிட்டுள்ளார்.
கோ 51 சன்ன நெல் இரகத்தை பிரபலப்படுத்துவதில் இந்திய அளவில் முயற்சி எடுத்து 13 மாநிலங்களுக்கு அந்த நெல்லைப் பயிரிடுவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளார். தமிழகத்தில் கோ 51 இரகத்தை பயிரிட்ட ஒரு விவசாயி 18 டன்கள் மகசூல் எடுத்து சாதனை படைத்து தமிழக முதலமைச்சரிடம் கடந்த குடியரசுதின விழாவில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பரிசு பெற்றுள்ளார்.
முனைவர் ச. இராபின் (லேட்) அவர்களின் இந்த நெல் ஆராய்ச்சிகளின் சாதனைகளுக்காக முனைவர் இ.எ. சித்திக் பயன்னியம் விருது, மரபியல் துறை, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் பிப்ரவரி 9, 2018 ஆம் ஆண்டு புது தில்லியில் வழங்கப்பட்டது. முனைவர் ஏ.கே. சிங், துறைத் தலைவர், முனைவர் பத்ம ஆர்.பி. சர்மா அன்னரின் சாதனைகளைப் பற்றிக் கூறினர். விழாவின் சிறப்பு விருந்தினர் கே.வி. பிரபு, சேர்மன், பி.பி.வி எப்.ஆர்.ஐ அவர்கள் விருதை ச. இராபின் அவர்களின் துணைவியார் சலோமி இராபினுக்கு வழங்கினார். விழாவில் பல முன்னோடி விஞ்ஞானிகள் பங்கு பெற்றனர்.