சி.பி.ஐ.(எம்) பேரணியில் போலீஸார் தடியடி : சிறுவன் உட்பட 6 பேர் படுகாயம்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் போலீஸார் தடியடி நடத்தியதில் 5 வயது சிறுவன் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.


தூத்துக்குடி : தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் போலீஸார் தடியடி நடத்தியதில் 5 வயது சிறுவன் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த 17-ஆம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது. இதனையொட்டி, இன்று மாலை செந்தொண்டர் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய பேரணி எட்டையபுரம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் திடல் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், டூவிபுரம் ஐந்தாவது தெரு அருகே பேரணி சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு கார் சாலையை கடக்க முயன்றுள்ளது. பேரணியில் சென்றவர்கள் காரை நின்று செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அது ஏ.டி.எஸ்.பி., வாகனம் என்பதால் வழி விடுமாறு போலீஸார் தெரிவித்தனர். ஆனால், வழி கொடுக்க மறுத்ததால், ஊர்வலத்தில் வந்த தோழர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போலீஸார் திடீரென தடியடி நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில், திருப்பூரைச் சேர்ந்த விமல் (23), அகிலேஷ் (5), திண்டுக்கல்லைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

இதனிடையே, போலீஸாரை பேரணியில் கலந்துகொண்டவர்கள் தாக்க முற்பட்டனர். இதில், ஆயுத காவல் படைப் பிரிவைச் சேர்ந்த ராம்சுந்தர் (27), துரைராஜ் (32) ஆகியே இருவர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் அரைமணி நேரம் தாமதத்திற்கு பிறகு பேரணி மீண்டும் துவங்கியது. 

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...