திருப்பூர் அருகே தோட்டத்தில் ஆடு மேய்ந்ததற்காக தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவமரியாதை செய்ததாக பாதிக்கப்பட்டவர் காங்கேயம் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டத்தில் ஆடு மேய்ந்ததற்காக தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவமரியாதை செய்ததாக பாதிக்கப்பட்டவர் காங்கேயம் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட தீத்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு தேவி என்ற மனைவியும், மலர்விழி (19) என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த வாரம் இவர்களது ஆடு பக்கத்து தோட்டத்தில் மேய்ந்து விட்டதாக சரசு என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி இரவு 9 மணிக்கு குட்டவலசு பகுதியைச் சேர்ந்த சோமு, சண்முகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் சக்திவேலை அழைத்துப் பேசியுள்ளனர்.

அப்போது, ஆடு மேய்ந்தது தொடர்பாக ஊர்க் கூட்டம் போட்டுள்ளதாகவும், சரசுவை தகாத வார்த்தைகளில் பேசிய சக்திவேலுவின் மகள் மலர்விழியை அழைத்து வரும்படியும் கூறியுள்ளனர். இரவு நேரம் என்பதால் அவர்களை அழைத்து வர சக்திவேல் மறுத்துள்ளார். தொடர்ந்து அவர்கள் மிரட்டல் விடுத்ததால், மனைவி, மகன் மற்றும் மகளை சக்திவேல் அழைத்து வந்துள்ளார். தோட்டத்தில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் மலர்விழி, தோட்ட உரிமையாளர் சரசுவை தகாத வார்த்தை பேசியதாகவும், எனவே, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால், மலர்விழிக்குப் பதில் அவரது தாயார் தேவி, காலில் விழுவதற்கு தயாராக இருந்த நிலையில், அதனைக் குறுக்கிட்ட அவரது மகன் சதீஸ்குமாரை கூட்டத்தில் இருந்த சிலர் தாக்க முயன்றுள்ளனர். அப்போது, தடுக்க நினைத்த தேவி தாக்கப்பட்டுள்ளார். பின்னர், சகோதரனைக் காப்பாற்ற நினைத்த மலர்விழி, அங்கிருந்தவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தேவியும், அவரது கணவர் சக்திவேலுவும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
சாதாரணமாக ஆடு மேய்ந்த பிரச்சினையில் வார்த்தை பேசியதாக மன்னிப்பு கேட்க வைத்து, குடும்பத்தையே காலில் விழ வைத்து, தாக்கி அவமானப்படுத்தியதாக சண்முகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர், கவீன், மனோகர், செந்தில் ஆகியோர் மீது காங்கயம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தேவி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 4 பேரும் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட தீத்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு தேவி என்ற மனைவியும், மலர்விழி (19) என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த வாரம் இவர்களது ஆடு பக்கத்து தோட்டத்தில் மேய்ந்து விட்டதாக சரசு என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி இரவு 9 மணிக்கு குட்டவலசு பகுதியைச் சேர்ந்த சோமு, சண்முகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் சக்திவேலை அழைத்துப் பேசியுள்ளனர்.

அப்போது, ஆடு மேய்ந்தது தொடர்பாக ஊர்க் கூட்டம் போட்டுள்ளதாகவும், சரசுவை தகாத வார்த்தைகளில் பேசிய சக்திவேலுவின் மகள் மலர்விழியை அழைத்து வரும்படியும் கூறியுள்ளனர். இரவு நேரம் என்பதால் அவர்களை அழைத்து வர சக்திவேல் மறுத்துள்ளார். தொடர்ந்து அவர்கள் மிரட்டல் விடுத்ததால், மனைவி, மகன் மற்றும் மகளை சக்திவேல் அழைத்து வந்துள்ளார். தோட்டத்தில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் மலர்விழி, தோட்ட உரிமையாளர் சரசுவை தகாத வார்த்தை பேசியதாகவும், எனவே, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால், மலர்விழிக்குப் பதில் அவரது தாயார் தேவி, காலில் விழுவதற்கு தயாராக இருந்த நிலையில், அதனைக் குறுக்கிட்ட அவரது மகன் சதீஸ்குமாரை கூட்டத்தில் இருந்த சிலர் தாக்க முயன்றுள்ளனர். அப்போது, தடுக்க நினைத்த தேவி தாக்கப்பட்டுள்ளார். பின்னர், சகோதரனைக் காப்பாற்ற நினைத்த மலர்விழி, அங்கிருந்தவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தேவியும், அவரது கணவர் சக்திவேலுவும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
சாதாரணமாக ஆடு மேய்ந்த பிரச்சினையில் வார்த்தை பேசியதாக மன்னிப்பு கேட்க வைத்து, குடும்பத்தையே காலில் விழ வைத்து, தாக்கி அவமானப்படுத்தியதாக சண்முகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர், கவீன், மனோகர், செந்தில் ஆகியோர் மீது காங்கயம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தேவி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 4 பேரும் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.