பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவண பத்திர எழுத்தர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆவண பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆவண பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆன்-லைன் மூலம் பத்திரம் பதிவு செய்து கொள்வதை பதிவுத்துறை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், ஆன்-லைன் மூலம் பதிவு கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்வது தடைபட்டால், பதிவு கட்டணத்தை திரும்பப் பெற வழிவகை செய்ய வேண்டும், மற்றும் உயில் சாசனம் போன்ற ஆவணங்களைப் பதிவு செய்ய ஆப்லைன் மூலம் பத்திரப் பதிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், பத்திர எழுத்தர்களை இடைத்தரகர் என்று கூற வேண்டாம் என்றும், மேற்கூறிய தீர்மானங்கள் நிறைவேற வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாவிடில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் ஆவண பத்திர எழுத்தர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...