ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆவண பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆவண பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆன்-லைன் மூலம் பத்திரம் பதிவு செய்து கொள்வதை பதிவுத்துறை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், ஆன்-லைன் மூலம் பதிவு கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்வது தடைபட்டால், பதிவு கட்டணத்தை திரும்பப் பெற வழிவகை செய்ய வேண்டும், மற்றும் உயில் சாசனம் போன்ற ஆவணங்களைப் பதிவு செய்ய ஆப்லைன் மூலம் பத்திரப் பதிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், பத்திர எழுத்தர்களை இடைத்தரகர் என்று கூற வேண்டாம் என்றும், மேற்கூறிய தீர்மானங்கள் நிறைவேற வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாவிடில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் ஆவண பத்திர எழுத்தர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆன்-லைன் மூலம் பத்திரம் பதிவு செய்து கொள்வதை பதிவுத்துறை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், ஆன்-லைன் மூலம் பதிவு கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்வது தடைபட்டால், பதிவு கட்டணத்தை திரும்பப் பெற வழிவகை செய்ய வேண்டும், மற்றும் உயில் சாசனம் போன்ற ஆவணங்களைப் பதிவு செய்ய ஆப்லைன் மூலம் பத்திரப் பதிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், பத்திர எழுத்தர்களை இடைத்தரகர் என்று கூற வேண்டாம் என்றும், மேற்கூறிய தீர்மானங்கள் நிறைவேற வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாவிடில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் ஆவண பத்திர எழுத்தர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.