விவசாயிகளுக்கு லாபப் பயிராக மாறிய குருமிளகு

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்த நிலையில், விவசாயிகளுக்கு லாபத்தைத் தரும் குருமிளகை பயிரிட்டுள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்த நிலையில், விவசாயிகளுக்கு லாபத்தைத் தரும் குருமிளகை பயிரிட்டுள்ளனர். 

குன்னூர், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் அதிகளவு பயிரிடப்படும் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தேயிலை செடிகளை நீக்கி விட்டு விவசாயிகள் காபி விவசாயத்துக்கு மாறியுள்ளனர். மேலும், கூடலூர் பகுதியில் தேயிலை, காபி, ஏலம், குருமிளகு, பாக்கு போன்ற நீண்ட காலப் பயிர்களை தவிர, குறுகிய கால பயன்தரும் காய்கறிகள், நெல் மற்றும் நேந்திர வாழை, இஞ்சி உற்பத்தியிலும் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில், விளைவிக்கப்படும் பாகற்காய், பூசணி, பஜ்ஜிமிளகாய், இஞ்சி, நேந்திர வாழை ஆகியவை அதிகளவில் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவற்றின், விலையின் ஏற்றத் தாழ்வு, கேரள சந்தையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றில், குருமிளகு விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டி தருகிறது. 

குருமிளகு மொத்த வியாபாரிகள் கூறும் போது, இந்தாண்டு காய்ந்த குருமிளகுக்கு விலை சரிந்துள்ளது. கிலோ ரூ. 850 முதல் ரூ.1,000 வரை விலை போன குருமிளகு விலை தற்போது ரூ. 450 ஆக சரிந்துள்ளது. இந்நிலையில், பச்சை குருமிளகின் விலை அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ. 120 முதல் ரூ. 140 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் தற்போது குருமிளகு அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...