காட்டெருமை தாக்கியதில் தோட்ட வேலைக்குச் சென்ற பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.மேலும், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வனவிலங்குள் சேதப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், இன்று உதகையை அடுத்துள்ள கல்லட்டி அண்ணா நகர் பகுதியில் தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த அன்னலட்சுமி (55) என்பவரை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை திடீரென தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அன்னலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் நகர்ப்பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையாகி விட்டதாகவும், எனவே, இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...