நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.மேலும், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வனவிலங்குள் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று உதகையை அடுத்துள்ள கல்லட்டி அண்ணா நகர் பகுதியில் தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த அன்னலட்சுமி (55) என்பவரை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை திடீரென தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அன்னலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் நகர்ப்பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையாகி விட்டதாகவும், எனவே, இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.மேலும், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வனவிலங்குள் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று உதகையை அடுத்துள்ள கல்லட்டி அண்ணா நகர் பகுதியில் தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த அன்னலட்சுமி (55) என்பவரை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை திடீரென தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அன்னலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் நகர்ப்பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையாகி விட்டதாகவும், எனவே, இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.