கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் வேளாண் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது.
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் வேளாண் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் டி. சுதாகர் திறந்துவைத்து பேசுகையில், "இந்த புத்தக கண்காட்சியினாது வருடா வருடம் நடைபெறும். இந்த வருடம் மாணவர்களுக்கு தேவைப்படும் விதமாக அறிவியல் சார்ந்த நிறைய புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது என்றும் பல்கலைக்கழக நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்து அதை வாங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இக்கண்காட்சியினை கான வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இக்கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 22 புத்தக பதிப்பகங்கள் கலந்துகொண்டுள்ளனர் என கூறினார் . இந்த புத்தக கண்காட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் சம்மபந்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
