நியாய விலைக் கடையில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது : அமைச்சர்

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவு வழங்கல் மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :-  தமிழகத்தில் இதுவரை 99 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருள்கள் வாங்கும் முறை முழுவதுமாக அமலுக்கு வருகிறது. மார்ச் 1-ம் தேதி ஸ்மார்ட் கார்டு கட்டாயம். இருப்பினும், ஸ்மார்ட் கார்டு இல்லை என்பதற்காக ரேஷன் பொருள்கள் மறுக்கப்படாது. பயனாளர்களுக்குத் தேங்காய் எண்ணெய் வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை. எனவே, இந்த மாதம் முதல் நியாயவிலைக் கடைகளில் மசூர் பருப்பு வழங்கப்படாது.

ரேஷன் பொருள்களைக் கடத்துபவர்கள், உணவுப் பொருள்களை வழங்குவதில் மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த விவகாரங்கள் தொடர்பாக 1,037 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...