இனி வங்கி அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம்

வங்கிகள் அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வங்கிகள் அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் பொதுத்துறை வங்கிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில், 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் ஒரு கிளையில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இதுபோன்று 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் ஒரு கிளையில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த ‘கிளர்க்’ பணியாளர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவின்படி, பாங்க் ஆப் பரோடா பணியை தொடங்கிவிட்டது என தகவல் வெளியாகி உள்ளது.

“மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதிகாரிகளுக்கான இடமாற்றம் விவகாரத்தில் வங்கியின் கொள்கையின்படி, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில் எந்தஒரு அதிகாரியும் இருக்க கூடாது, நகராட்சி வரம்புக்குள் உள்பட்ட கிளைகளில் 5 ஆண்டுகளாக இருக்க கூடாது,” என பாங்க் ஆப் பரோடா குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மோசடி நடந்து உள்ளது வெளியே தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு விசாரணை முகமைகள் விசாரித்து வருகிறது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...