”அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல”

காவிரி நீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் அவர் பேசுகையில், ''இரட்டை இலைச் சின்னம், தலைமை கழகம் கிடைப்பதற்காகவும், 1 1/2 கோடி தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் அ.தி.மு.க., இணையப் பாடுபட்டோம். மேலும், பிரதமரை சந்தித்து ஆலோசனை கேட்டதில் கழகம் பிரியக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இணையக் கூறினார். அதன்படி, இணைந்தோம். தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சியைக் கலைக்க நினைக்கிறார். மத்திய அரசின் திட்டங்களில் ஜெயலலிதா எந்த நிலையை எடுத்தாரோ, அதே நிலையை நாங்கள் கடைபிடிக்கிறோம். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தினை முடிவு செய்யும் நேரத்தில், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார். ஆளும் கட்சிதான் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியும். காவிரி நீருக்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, உண்ணாவிரதம் இருந்து நல்ல  தீர்ப்பினை பெற்று தந்ததோடு இல்லாமல், காவிரி ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்தார். சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால், அது பற்றி கருத்துக் கூற முடியாது.'' இவ்வாறு கூறினார்,

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...