பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த பயிற்சி முகாம் தொடக்கம்

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் உதகையில் தொடங்கியது.

நீலகிரி : பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் உதகையில் தொடங்கியது. 



மலை மாவட்டமான நீலகிரியில் மழை காலங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் விரைவில் பருவமழை துவங்க உள்ளது. இந்த மழையின் போது நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளானது மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், உதகையில் 3 நாட்கள் பேரிடர் மீட்பு பயிற்சி இன்று தொடங்கியது. இப்பயிற்சியானது காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பேரிடர் மேலாண்மையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆசி பெங்கார மற்றும் தலைமை கமாண்டர் ரேகா நம்பியார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களை நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பயிற்சி பெறுபவர்களுக்கு எடுத்துரைத்தனர். பேரிடர் மேலாண்மை மீட்புக்காக 13 பட்டாளியன் தொடங்கப்பட்டு, இதற்காக ரூ. 13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 நாள் பயிற்சியில் களப்பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...