பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் உதகையில் தொடங்கியது.
நீலகிரி : பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் உதகையில் தொடங்கியது.

மலை மாவட்டமான நீலகிரியில் மழை காலங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் விரைவில் பருவமழை துவங்க உள்ளது. இந்த மழையின் போது நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளானது மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உதகையில் 3 நாட்கள் பேரிடர் மீட்பு பயிற்சி இன்று தொடங்கியது. இப்பயிற்சியானது காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பேரிடர் மேலாண்மையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆசி பெங்கார மற்றும் தலைமை கமாண்டர் ரேகா நம்பியார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களை நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பயிற்சி பெறுபவர்களுக்கு எடுத்துரைத்தனர். பேரிடர் மேலாண்மை மீட்புக்காக 13 பட்டாளியன் தொடங்கப்பட்டு, இதற்காக ரூ. 13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 நாள் பயிற்சியில் களப்பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் மழை காலங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் விரைவில் பருவமழை துவங்க உள்ளது. இந்த மழையின் போது நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளானது மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உதகையில் 3 நாட்கள் பேரிடர் மீட்பு பயிற்சி இன்று தொடங்கியது. இப்பயிற்சியானது காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பேரிடர் மேலாண்மையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆசி பெங்கார மற்றும் தலைமை கமாண்டர் ரேகா நம்பியார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களை நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பயிற்சி பெறுபவர்களுக்கு எடுத்துரைத்தனர். பேரிடர் மேலாண்மை மீட்புக்காக 13 பட்டாளியன் தொடங்கப்பட்டு, இதற்காக ரூ. 13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 நாள் பயிற்சியில் களப்பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.