வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மகளின் உடலை மீட்டுத் தர வலியுறுத்தல்

வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தங்களது மகளின் உடலை மீட்டு தர வலியுறுத்தி அவரது பெற்றோர்கள் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தங்களது மகளின் உடலை மீட்டு தர வலியுறுத்தி அவரது பெற்றோர்கள் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவரது 17 வயது மகள் பூர்ணாதேவியை  கடந்த 2016-ம் ஆண்டு மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த ரிமுஷேக் என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாகவும், இருவரும் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பூர்ணாதேவி அவ்வப்போது தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முருகானந்தத்திற்க்கு அழைத்த ரிமுஷேக், பூர்ணாதேவி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

மகளின் மரணத்தில் சந்தேகமடைந்த முருகானந்தம், செல்வ கோமதி தம்பதியினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமாவிடம் தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்தனர். அதனடிப்படையில், திருப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையில், ரிமுஷேக், பூர்ணாதேவி இடையே கடந்த 9-ம் தேதியன்று சண்டை நடந்துள்ளதாகவும், இதனையடுத்தே புர்ணாதேவி இறந்துள்ளதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் தெரியவந்துள்ளது. மேலும், பூர்ணாதேவியின் உடலைக் கைப்பற்றிய வங்கதேச போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியதும் திருப்பூர் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தங்களது மகள் உடலை சொந்த ஊரான திருப்பூருக்கு கொண்டு வர வேண்டும், தனது மகள் மரணத்தில் உள்ள சந்தேகங்களை கலைய வேண்டும், தங்கள் மகள் இறப்பிற்கு காரணமான ரிமுஷேக்கிற்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பூர்ணாதேவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் மனு அளிததனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...