3-வது இன்னிங்சை தொடங்கினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான் 63) மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான் 63) மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். 

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், 1995-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்த நிலையில், 2004-ம் ஆண்டு ஜெமிமாவை விவாகரத்து செய்தார் இம்ரான் கான். அதன்பிறகு பத்திரிகையாளராக இருந்த ரெஹம் கான் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே ரெஹம்கானையும் விவாகரத்து செய்தார். 

இந்நிலையில், உளவியல் ஆலோசனைகள் வழங்கும் புஷ்ரா மணீகா என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். லாகூரில் மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...