மரங்களில் ஆணியடித்து மாட்டப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.



கோவை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரப் பதாகைகள் வைத்து விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. 



இதனைத் தொடர்ந்து, 'ஓசை தன்னார்வ அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருநெல்வேலியைச் சார்ந்த பேன்ட்செட் என்ற நிறுவனத்தினரே மரங்களில் விளம்பரங்கள் செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தினரே மரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என்று ஓசை அமைப்பினர் வலியுறுத்தினர். 

அதன் பேரில், அனைத்து மரங்களிலும் மாட்டப்பட்டிருந்த பல்வேறு நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகளையும் அந்த நிறுவனத்தினரே அகற்றினர். இதே போல் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரங்களில் ஒரு குறிப்பிட்ட கல்லூரி தொடர்பான விளம்பரம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணியடித்து மாட்டப்பட்டுள்ளது.

அவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இவ்வாறாக மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் ஒரு மரத்திற்கு ரூ.2000 வீதம் அபராதம் வசூலிக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாகவும் ஓசை அமைப்பைச் சேர்ந்த சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...