திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சத்தியமங்கலம் பகுதியில் இருந்து தாராபுரம் நோக்கி தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே வந்த போது ஒட்டன்சத்திரத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் பேருந்துகள் இரண்டும் அதி வேகமாக பயணித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் பகுதியில் இருந்து தாராபுரம் நோக்கி தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே வந்த போது ஒட்டன்சத்திரத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் பேருந்துகள் இரண்டும் அதி வேகமாக பயணித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
