மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த வெண்புள்ளிக்கான மருந்து இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது.
கோவை : மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த வெண்புள்ளிக்கான மருந்து இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது.

வெண்புள்ளிகள் என்பவை தோலின் மேற்பரப்பில் திட்டுத் திட்டாகவோ அல்லது புள்ளி வடிவிலோ காணப்படுபவை. தமிழகத்தில் மட்டும் சுமார் 37 லட்சம் பேர், இந்திய அளவில் சுமார் 6 கொடி பெரும் வெண்புள்ளிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர். பரவாத தன்மையுடைய இந்த வெண்புள்ளிகள் சமுதாயத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில், வெண்புள்ளி உள்ளவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் அதற்கான மருந்து வெளியிடும் நிகழ்ச்சி இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது. இதில் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் டாக்டர்.உமாபதி கலந்து கொண்டு பேசுகையில், "வெண்புள்ளி என்பது நோய் அல்ல. இது குணப்படுத்தக்கூடியது. இதற்கான மருந்தை மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மருந்தை தொடர்ந்து 400 நாட்கள் உண்டுவர வெண்புள்ளிகள் மறைந்து இயல்பான தோலின் நிறத்தை அடையலாம். உலகப் பிரபலம் பெற்ற மைக்கில் ஜாக்ஸனுக்கும் வெண்புள்ளிகள் இருந்தன. இந்தியாவில் பலருக்கு இந்த வெண்புள்ளி உள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்." என்றார்.
தொடர்ந்து, வெண்புள்ளிக்கான மருந்தை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் தலைவர் கிருஷ்ணன் வெளியிட்டார். இதனை 100-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கிச்சென்றனர்.

வெண்புள்ளிகள் என்பவை தோலின் மேற்பரப்பில் திட்டுத் திட்டாகவோ அல்லது புள்ளி வடிவிலோ காணப்படுபவை. தமிழகத்தில் மட்டும் சுமார் 37 லட்சம் பேர், இந்திய அளவில் சுமார் 6 கொடி பெரும் வெண்புள்ளிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர். பரவாத தன்மையுடைய இந்த வெண்புள்ளிகள் சமுதாயத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில், வெண்புள்ளி உள்ளவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் அதற்கான மருந்து வெளியிடும் நிகழ்ச்சி இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது. இதில் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் டாக்டர்.உமாபதி கலந்து கொண்டு பேசுகையில், "வெண்புள்ளி என்பது நோய் அல்ல. இது குணப்படுத்தக்கூடியது. இதற்கான மருந்தை மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மருந்தை தொடர்ந்து 400 நாட்கள் உண்டுவர வெண்புள்ளிகள் மறைந்து இயல்பான தோலின் நிறத்தை அடையலாம். உலகப் பிரபலம் பெற்ற மைக்கில் ஜாக்ஸனுக்கும் வெண்புள்ளிகள் இருந்தன. இந்தியாவில் பலருக்கு இந்த வெண்புள்ளி உள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்." என்றார்.
தொடர்ந்து, வெண்புள்ளிக்கான மருந்தை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் தலைவர் கிருஷ்ணன் வெளியிட்டார். இதனை 100-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கிச்சென்றனர்.