கோவையில் வெண்புள்ளிக்கான மருந்து வெளியீடு

மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த வெண்புள்ளிக்கான மருந்து இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது.

கோவை : மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த வெண்புள்ளிக்கான மருந்து இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது. 



வெண்புள்ளிகள் என்பவை தோலின் மேற்பரப்பில் திட்டுத் திட்டாகவோ அல்லது புள்ளி வடிவிலோ காணப்படுபவை. தமிழகத்தில் மட்டும் சுமார் 37 லட்சம் பேர், இந்திய அளவில் சுமார் 6 கொடி பெரும் வெண்புள்ளிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர். பரவாத தன்மையுடைய இந்த வெண்புள்ளிகள் சமுதாயத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி வருகிறது.



இந்த நிலையில், வெண்புள்ளி உள்ளவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் அதற்கான மருந்து வெளியிடும் நிகழ்ச்சி இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது. இதில் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் டாக்டர்.உமாபதி கலந்து கொண்டு பேசுகையில், "வெண்புள்ளி என்பது நோய் அல்ல. இது குணப்படுத்தக்கூடியது. இதற்கான மருந்தை மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. 



இந்த மருந்தை தொடர்ந்து 400 நாட்கள் உண்டுவர வெண்புள்ளிகள் மறைந்து இயல்பான தோலின் நிறத்தை அடையலாம். உலகப் பிரபலம் பெற்ற மைக்கில் ஜாக்ஸனுக்கும் வெண்புள்ளிகள் இருந்தன. இந்தியாவில் பலருக்கு இந்த வெண்புள்ளி உள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்." என்றார். 

தொடர்ந்து, வெண்புள்ளிக்கான மருந்தை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் தலைவர் கிருஷ்ணன் வெளியிட்டார். இதனை 100-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கிச்சென்றனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...