தற்காப்புக்காக புலியை தாக்கிக் கொன்ற முதியவர்

கிருஷ்ணகிரி அருகே தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியை முதியவர் ஒருவர் கத்தியால் தாக்கிக் கொன்றார்.


கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியை முதியவர் ஒருவர் கத்தியால் தாக்கிக் கொன்றார்.



கிருஷ்ணகிரி மாவட்டம் மஹாராஜாகடை அடுத்த மேலுகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் கால் நடைகள் வைத்து பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை விவசாய நிலத்தில் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த சிறுத்தை புலி ராமமூர்த்தியை தாக்க முற்பட்டது. இதனை அடுத்து சிறுத்தை புலியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மாடுகளுக்கு இலை கொடிகள் வெட்டுவதற்கு வைத்து இருந்த கத்தியால் அதனைத் தாக்கினார். இதில் சிறுத்தை புலியின் கால், கழுத்து, முதுகு போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுத்தை புலி பலியானது. 



இதில் ராமமூர்த்தியும் காயமடைந்தார். தற்போது அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதியவர் தாக்கியதில் சிறுத்தைப் புலி பலியானதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் வனகோட்ட கால்நடை மருத்துவர் பிரகாஷ் சிறுத்தைப் புலியை மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். மேலும் வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...