ஸ்டார்ட அப் இந்தியா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) ஆலோசனை நடத்தினர்.
கோவை: ஸ்டார்ட அப் இந்தியா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) ஆலோசனை நடத்தினர்.
பாரத பிரதமர் மோடி அறிவித்த ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம், தொழில் தொடங்க தடையாக உள்ள பல்வேறு சட்ட திட்டங்களை எளிமைப்படுத்துவது மற்றும் தொழில் தொடங்க ஆதரவான சூழல் உருவாக்குதல், நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல், கல்வி நிலையங்கள், தொழில்நிறுவனங்களோடு கூடிய ஒத்துழைப்பிற்கு மற்றும் தொழில்காப்பதிற்கு ஊக்கமளித்தல் போன்றவையாகும்.
பல்வேறு மாநிலங்களின் வேறுபட்ட தொழில் கொள்கைகளின் காரணமாக, பல தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைந்து நாடு முழுவதும் 75 தொழில் காப்பகங்களை என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி. உடன் இணைந்து அமைக்க முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஸ்டார்ட் அப் திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்த வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து சீமாவில் கூடுதல் இயக்குநர் சஜீனா தலைமையில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, ஸ்டார்ட் அப் திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் சீமா வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து கருத்துக்களையும் ஒன்றிணைத்து, ஒரு வரைவு திட்டத்தினை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பி, அதற்கான ஒப்புதல் பெற்றபின் அரசிற்கு சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது.
பாரத பிரதமர் மோடி அறிவித்த ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம், தொழில் தொடங்க தடையாக உள்ள பல்வேறு சட்ட திட்டங்களை எளிமைப்படுத்துவது மற்றும் தொழில் தொடங்க ஆதரவான சூழல் உருவாக்குதல், நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல், கல்வி நிலையங்கள், தொழில்நிறுவனங்களோடு கூடிய ஒத்துழைப்பிற்கு மற்றும் தொழில்காப்பதிற்கு ஊக்கமளித்தல் போன்றவையாகும்.
பல்வேறு மாநிலங்களின் வேறுபட்ட தொழில் கொள்கைகளின் காரணமாக, பல தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைந்து நாடு முழுவதும் 75 தொழில் காப்பகங்களை என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி. உடன் இணைந்து அமைக்க முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஸ்டார்ட் அப் திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்த வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து சீமாவில் கூடுதல் இயக்குநர் சஜீனா தலைமையில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, ஸ்டார்ட் அப் திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் சீமா வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து கருத்துக்களையும் ஒன்றிணைத்து, ஒரு வரைவு திட்டத்தினை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பி, அதற்கான ஒப்புதல் பெற்றபின் அரசிற்கு சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது.