காவிரி தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் பலவீனம் வெளிப்படுகிறது: இயக்குநர் ராஜு முருகன்

தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தனது அடுத்த படமான ஜிப்ஜி, எல்லாப் பாடங்களை போல மக்களுக்கான சமூகம் சார்ந்த அரசியல் படமாக இருக்கும். தமிழக சூழலில் சாதி அபாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதி ஆணவ கொலைகளுக்கு பின்னால் அரசியல் இருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் சாதியம், மதவாதம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சாதி, மதவாதத்தில் இருந்து பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துகள்தான் மக்களைக் காப்பாற்றி கொண்டிருக்கிறது. இதனை உடைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு நிர்வாகம் பலவீனப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் மக்கள் ஜோக்கர்கள் ஆக்கப்படுகின்றனர். தமிழகத்தின் நிலை எவ்வளவு பலவீனப்பட்டுள்ளது என்பதை காவிரி தீர்ப்பு காட்டுகிறது. இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...