நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
குன்னூர் முத்தாளம்மன் திருக்கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். இங்கிருந்து, சாலை மார்க்கமாக அவர் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சென்றார். அங்கு, அவரை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், முத்தாளம்மன் ஆலயத்திற்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, , இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குன்னூர் முத்தாளம்மன் திருக்கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். இங்கிருந்து, சாலை மார்க்கமாக அவர் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சென்றார். அங்கு, அவரை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், முத்தாளம்மன் ஆலயத்திற்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, , இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.