கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் செய்து வருகின்றன. இந்த நிலையில், கோவை கெனோபி இயற்கை அமைப்பு சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்துள்ள பறவைகள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை 06.30 மணி முதல் 08.30 வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குளக்கரையில் ஒயாரமாக அமர்ந்திருந்த பறவைகளை அவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
” பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பு. பறவைகள் காணும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது சிறப்பான ஒன்று.” இவ்வாறு பார்வையாளர் ஒருவர் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் செய்து வருகின்றன. இந்த நிலையில், கோவை கெனோபி இயற்கை அமைப்பு சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்துள்ள பறவைகள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை 06.30 மணி முதல் 08.30 வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குளக்கரையில் ஒயாரமாக அமர்ந்திருந்த பறவைகளை அவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
” பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பு. பறவைகள் காணும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது சிறப்பான ஒன்று.” இவ்வாறு பார்வையாளர் ஒருவர் கூறினார்.