காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழலை திசைதிருப்ப முயற்சி: நிர்மலா சீதாராமன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த மோசடி காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த மோசடி காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இந்த மோசடி குறித்து மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- ஊழலில் சாதனை படைத்துள்ள காங்கிரஸ், வங்கி மோசடி குறித்து மத்திய அரசைக் குறை சொல்கிறது. அக்கட்சி தவறான குற்றச்சாட்டுகள் மூலம் நாட்டைத் தவறாக வழிநடத்தவும் முயற்சி செய்கிறது. உண்மையில். நிரவ் மோடி வங்கியில் மோசடி செய்தது கடந்த 2011ம் ஆண்டில் தான். மோசடியில் தொடர்புடைய கீதாஞ்சலி நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டில் பங்குச்சந்தை நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்.,13-ல் அந்த நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அதற்குப் பிறகு, 2 நாட்கள் கழித்து செப்.,15ல் அந்த நிறுவனத்திற்கு கூடுதலாக கடன் வழங்க அலகாபாத் வங்கிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதன் தொடர்புகளை இணைத்து பாருங்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எம். சிங்வியின் மனைவி அனிதா, நிரவ் மோடியின் நகைக்கடையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ளார். 

குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தும், காங்கிரஸ் கட்சி தைரியமாகப் பா.ஜ.க., மீது குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் செய்த குழப்பங்களை மத்திய அரசு சரி செய்து வருகிறது. நிரவ் மோடி மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்ததும், அவரைப் பிடிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. நிரவ் மோடி நாட்டை விட்டு ஓடியிருக்கலாம். ஆனால், அவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...