பயன்பாடற்று கிடக்கும் தடுப்பணைகளை பராமரிக்கக் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே, ஜீன் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமையும் பெய்யும். கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு மேலாக பெய்தாலும், வடகிழக்கு பருவமழை மழை முற்றிலும் பொய்த்தது.

இந்நிலையில் வறண்டு காணப்பட்ட அணைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் உயர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், உதகையை அடுத்த கடநாடு, ஒடயரட்டி, கூக்கல், கூக்கல்தொரை உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் விவசாயிகளின் நலன் கருதியும், கிராம மக்களின் குடிநீர் நலன் கருதியும் பல இலட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இந்த தடுப்பணைகள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் வீணாகி வருகின்றன. இதனால், மலைதோட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



எனவே, மாவட்ட நிர்வாகம் துரிதகதியில் கிராமப்புற பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களாக உள்ள அணைகளை தூர்வாரி முறையாகப் பராமரித்தால் மட்டுமே வரும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி விவசாயம் மேற்கொள்வதோடு, குடிநீர் பிரச்சனைக்கும் முழு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...