நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே, ஜீன் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமையும் பெய்யும். கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு மேலாக பெய்தாலும், வடகிழக்கு பருவமழை மழை முற்றிலும் பொய்த்தது.
இந்நிலையில் வறண்டு காணப்பட்ட அணைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் உயர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், உதகையை அடுத்த கடநாடு, ஒடயரட்டி, கூக்கல், கூக்கல்தொரை உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் விவசாயிகளின் நலன் கருதியும், கிராம மக்களின் குடிநீர் நலன் கருதியும் பல இலட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இந்த தடுப்பணைகள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் வீணாகி வருகின்றன. இதனால், மலைதோட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் துரிதகதியில் கிராமப்புற பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களாக உள்ள அணைகளை தூர்வாரி முறையாகப் பராமரித்தால் மட்டுமே வரும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி விவசாயம் மேற்கொள்வதோடு, குடிநீர் பிரச்சனைக்கும் முழு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே, ஜீன் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமையும் பெய்யும். கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு மேலாக பெய்தாலும், வடகிழக்கு பருவமழை மழை முற்றிலும் பொய்த்தது.
இந்நிலையில் வறண்டு காணப்பட்ட அணைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் உயர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், உதகையை அடுத்த கடநாடு, ஒடயரட்டி, கூக்கல், கூக்கல்தொரை உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் விவசாயிகளின் நலன் கருதியும், கிராம மக்களின் குடிநீர் நலன் கருதியும் பல இலட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இந்த தடுப்பணைகள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் வீணாகி வருகின்றன. இதனால், மலைதோட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் துரிதகதியில் கிராமப்புற பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களாக உள்ள அணைகளை தூர்வாரி முறையாகப் பராமரித்தால் மட்டுமே வரும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி விவசாயம் மேற்கொள்வதோடு, குடிநீர் பிரச்சனைக்கும் முழு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
