முதலமைச்சர் வருகையையொட்டி வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பம் சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

நீலகிரியில் முதலமைச்சருக்காக வைக்கப்பட்ட கட்சிக்கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததில், பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி: நீலகிரியில் முதலமைச்சருக்காக வைக்கப்பட்ட கட்சிக்கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததில், பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குன்னூர் ஒட்டுபட்டறையில் உள்ள முத்தாலம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்கள் வருகையையொட்டி, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை வழிநெடுகிலும் பேனர்களும் கொடிக் கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. 



இந்த நிலையில், பாரூக் என்பவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குன்னூரைச் சேர்ந்த லால்ஸ் ஃபால்ஸ் அருகே சென்ற போது, கொடிக் கம்பம் அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் உதவியுடன் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்த பாரூக்கின் உறவினர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.



பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, பாரூக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். நீதிமன்ற உத்தரவுகளை மீறி பொதுமக்களுக்கு இன்னல் தரும் கட் அவுட், கொடி கம்பங்கள் வைப்போர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே, அ.தி.மு.க., பேனரால் இறந்த ரகுவின் மரணத்திற்கு சரியான நீதி கிடைக்காத போது, அடுத்தடுத்து பொதுமக்களுக்கு துன்பம் தருவது பொதுமக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. தவறுகளைக் கண்டிக்க வேண்டிய ஆட்சியாளர்களே ஆட்சியில் இருக்கும் போது பொதுமக்களுக்கு எதிராக துன்பம் கொடுத்தால் புகார்களை யாரிடம் தருவது என்ற கேள்வியும் உள்ளங்களில் எழுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...