நாணயங்களை பெற மறுக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை

நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

வங்கிக் கிளைகளில் ரூ. 10 மற்றும் ரூ. 5 போன்ற நாணயங்களை வாங்க மறுப்பதால், சிறு வணிகர்களும், நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் கொண்டு வரும், 10, 5, 2, 1 ரூபாய் என அனைத்து நாணயங்களையும், வங்கிக் கிளைகள் ஏற்க வேண்டும். நாணயங்களை, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் செலுத்தினாலும், ரூபாய் நோட்டுகளாக கேட்டாலும், அதை வங்கிகள் ஏற்க வேண்டும். ஏற்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கிய காரணங்களுக்காக, வெவ்வேறு வடிவமைப்பில், 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. புழக்கத்தில் உள்ள, 14 வகையான, 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்பதால், மக்களும், வியாபாரிகளும் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...