சின்னத்திரை நடிகர் சபரிமலையில் மாரடைப்பால் மரணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோவை தேசிங்கு சபரிமலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோவை தேசிங்கு சபரிமலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பல்லடம் பனப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவருக்கு கவிதா (42) என்ற மனைவியும், லாவண்யா (23), ப்ரியா (21) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். ஓட்டுநராக ஆரம்பக் காலத்தில் வேலை செய்து வந்த சுப்பிரமணி வாட்டசாட்டமாக இருந்ததால் பல்வேறு மேடைநாடகங்களில் நடிக்கத் துவங்கினார். இவரது நடிப்பைக் கண்டு திரைப்படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணிக்கு கோவைதேசிங்கு என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. மனம்கொத்திப்பறவை உள்ளிட்ட திரைப்படங்களிலும், சந்தனக்காடு, வாணி-ராணி, வைரநெஞ்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை சபரிமலைக்கு மாலையணிந்து யாத்திரையாகச் சென்ற அவர், சரங்கொத்தி என்ற பகுதியில், மாரடைப்பால் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடத்திலுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சபரிமலையிலிருந்து நடிகர் சுப்பிரமணியின் உடல் பல்லடம் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், தொழிலதிபர்கள், அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

நடிகர் கோவைதேசிங்கு இறந்த சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், பழக மிகவும் எளிமையானவர் என்றும், அவரது இறப்பு தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...