மதுரை அருகே காதலிக்க மறுத்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அருகே காதலிக்க மறுத்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டைச் சேர்ந்த பாலமுருகன் (23), அச்சம்பட்டி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி அந்த மாணவியை பாலமுருகன் வற்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி, தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருந்த பாலமுருகன், காதலர் தினத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்துக் காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு அந்த மாணவி மறுத்ததால், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு பாலமுருகன் தலைமறைவாகி உள்ளார். படுகாயம் அடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அச்சம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டைச் சேர்ந்த பாலமுருகன் (23), அச்சம்பட்டி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி அந்த மாணவியை பாலமுருகன் வற்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி, தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருந்த பாலமுருகன், காதலர் தினத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்துக் காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு அந்த மாணவி மறுத்ததால், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு பாலமுருகன் தலைமறைவாகி உள்ளார். படுகாயம் அடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அச்சம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.