கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி ஸ்டிரைக்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த 14-ம் தேதி அம்மாநில அரசு அறிவித்த நிலையில், புதிய கட்டண உயர்வு மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், புதிய கட்டண உயர்வின்படி சாதாரண பேருந்துகளில் ரூ.8-ம், விரைவு பேருந்துகளில் ரூ.11-ம் உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பேருந்து கட்டண உயர்வை ரூ.8-க்கு பதிலாக ரூ.10ஆக உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேட்டிருந்தனர். இது தொடர்பாக 15-ம் தேதியன்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை கட்டணத்தையும் ஏற்க தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வு போதுமானதாக இல்லை எனக்கோரி கேரளா முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் இன்று (பிப்.,17) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். இதனால், கேரளாவில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...