சாலை விபத்தில் இளைஞர்கள் பலி

மேட்டுப்பாளையம் அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் தமிழரசன் (29). இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் தனது நண்பரான பினேஸ் (28) என்பவருடன் வெளியில் சென்றுவிட்டு நள்ளிரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் காரமடை அருகே  காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

காரமடை ஆசிரியர் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தமிழரசன் மற்றும் பீனேஸ் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காரமடை காவல்துறையினர் ஒட்டுநர் மதியழகனை தேடி வருகின்றனர். விபத்திற்கு பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டு வந்ததே காரணம் என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் அதிக வேகமாக தொடர்ந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உயிரிழந்த பினேஸ் என்பவருக்கு அன்மையில் திருமணமாகிய நிலையில் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமே ஆவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...