காதலர் தினத்தில் இந்து அமைப்பினர் தாலி கட்டி திருமணம் செய்து வைத்த ஆடு மற்றும் நாய்க்கு விவகாரத்து வழங்க கோரி கோவையில் இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
கோவை: காதலர் தினத்தில் இந்து அமைப்பினர் தாலி கட்டி திருமணம் செய்து வைத்த ஆடு மற்றும் நாய்க்கு விவகாரத்து வழங்க கோரி கோவையில் இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆலமேலு என்ற ஆட்டிற்கும், அஞ்சலி என்ற நாய்க்கும் இந்து அமைப்பினர் திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இன்று காலை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆடு மற்றும் நாயுடன் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒருவனுக்கு ஒருத்தி என்றும், தாலி கட்டியவுடன் வாழ்வது தான் கலாச்சாரம் என்றும் கூறும் இந்து அமைப்பினர், தாலி கட்டி திருமணம் செய்த ஆட்டையும், நாயையும் நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளனர். இந்து அமைப்பினர் திருமணம் செய்து வைத்த ஆட்டுக்கும், நாய்க்கும் விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். மேலும், இவற்றை கணவனுடன் சேர்த்து வைக்க கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்து ஒராண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடி உள்ளோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் விவகாரத்து மனு தாக்கல் செய்வார்கள்" என்றார்.

இந்த நூதன போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆலமேலு என்ற ஆட்டிற்கும், அஞ்சலி என்ற நாய்க்கும் இந்து அமைப்பினர் திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இன்று காலை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆடு மற்றும் நாயுடன் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒருவனுக்கு ஒருத்தி என்றும், தாலி கட்டியவுடன் வாழ்வது தான் கலாச்சாரம் என்றும் கூறும் இந்து அமைப்பினர், தாலி கட்டி திருமணம் செய்த ஆட்டையும், நாயையும் நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளனர். இந்து அமைப்பினர் திருமணம் செய்து வைத்த ஆட்டுக்கும், நாய்க்கும் விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். மேலும், இவற்றை கணவனுடன் சேர்த்து வைக்க கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்து ஒராண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடி உள்ளோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் விவகாரத்து மனு தாக்கல் செய்வார்கள்" என்றார்.

இந்த நூதன போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.