ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்தவர் தன்ராஜ். மருந்துக்கடை நடத்தி வரும் இவரை 7-ம் தேதி ஆர்.எஸ்.புரம் பழமுதிர் சோலை அருகில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். தொடர்ந்து அன்று இரவே அவர் விடுவிக்கப்பட்டார்.
அஸ்வின் என்ற நபரிடம் ரூ.22 லட்சம் கடனாக வாங்கிய தன்ராஜ் கடனை திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கடத்தி துன்புறுத்தப்பட்டதாகப் போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் தன்ராஜை கடத்தி துன்புறுத்தியதாக அக்னேஷ் (30), கார்த்திக் கண்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.