குட்டி யானைக்கு ஆலிவ் மசாஜ்

முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு முகாமில் வளர்க்கப்படும் குட்டி யானைக்கு நாள்தோறும் ஆலிவ் ஆயில் தேய்த்து உடல் மெருகேற்றப்படுகிறது.

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு முகாமில் வளர்க்கப்படும் குட்டி யானைக்கு நாள்தோறும் ஆலிவ் ஆயில் தேய்த்து உடல் மெருகேற்றப்படுகிறது.



ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் தாயை பிரிந்து எட்டு மாதமான ஆண் குட்டி யானை தவித்து வந்தது. 

உடலில் கயங்களுடன் அந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர். 

தற்போது அதன் உடல்நலம் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ளது. குட்டி யானையை பராமரிக்கும் வகையில், தனியாக கூண்டு அமைத்து அதனுள் இரவில் வெப்பம் தொடரும் வகையில் 'வாம்மர்' வைக்கப்பட்டதோடு வைக்கோல் மெத்தையும் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அதனை பராமரிக்கும் வகையில் பொம்மன் என்ற பாகனும் அவரது மனைவி நியமிக்கப்பட்டனர்.  

ஒரு குழந்தை எவ்வாறு தனது தாய், தந்தையரை பிரிந்து இருக்காதோ அதே போன்று, இந்த குட்டியானையும் இருவரையும் பிரிந்து இருக்காது. இரவில் குட்டி யானையுடன் உறங்கும் இவர்கள், அதனைக் குளிப்பாட்டுவது, புற்களை ஊட்டி விடுவது, பால் கொடுப்பது,  வெயில் உலர்த்துவது என தனிப்பாசத்துடன் இந்த குட்டி யானையை கவனித்து வருகின்றனர்.

இருவரும் கூண்டுக்குள் வந்துவிட்டால், குட்டியும் ஓடிவந்து, அவர்களை தனது தும்பிக்கையால் பிடித்துக்கொள்ளும் காட்சியும், சமையலறையில் பாத்திர சப்தம் கேட்டால் ஓடிவந்து எட்டி பார்ப்பதும் அனைவரும் கவர்ந்து வருகிறது.

தற்போது, உடல் நலம் தேறியுள்ள யானைக்கு தினசரி மருத்துவ சிகிச்சை, சத்து மருந்துகள் வழங்கப்படுவதுடன், தினசரி காலையில் குளிப்பாட்டியவுடன், அதன் உடல் முழுவதும் ஆலிவ் ஆயில் தேய்த்து மசாஜ் செய்யப்படுகிறது.

இதனால் யானைக்குட்டியின் உடலில் பளபளப்பு ஏற்பட்டு மெருகுடன் காட்சி அளிக்கிறது. குட்டியின் அருகே யார் சென்றாலும், பாகன் பொம்மனிடம் ஓடிச் சென்று மறைந்து கொள்கிறது.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், "இந்த யானை குட்டியின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருதி, சுற்றுலாப் பயணிகள் யாரையும் அருகே விடவோ, தொடவோ அனுமதிப்பதில்லை. இதனால் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தூரத்திலிருந்து குட்டியின் சேட்டைகளை ரசித்து செல்லாம். யானை தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளது." என்றனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...